முடிச்சூர் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் தலை கண்டெடுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் தலை கண்டெடுக்‍கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி குன்றத்தூர் காவல்நிலைய எல்லைக்‍குட்பட்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தலை மற்றும் கை, கால்கள் இல்லாத நிலையில், அடையாளம் தெரியாத உடல் ஒன்று மீட்கப்பட்டது. பின்னர் கால் பகுதி மற்றொரு இடத்தில் மிட்கப்பட்டது. இந்த நிலையில் தாம்பரம் அருகே முடிச்சூர் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் தலை மீட்கப்பட்டதால், அந்த உடலின் தலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்‍கப்படுகிறது. கொலை செய்யப்பட்ட நபர் யார்? கொலையாளி யார்? காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.

Night
Day