முதல் தகவல் அறிக்கையில் நீதிபதி பெயர் - உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முதல் தகவல் அறிக்கையில், நீதிபதியின் பெயரைக் குறிப்பிட்ட காவல் உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பெரவள்ளூரில் குமார் என்பவருக்கு சொந்தமான கடையை முகமது அபுதாஹிர் என்பவர் வாடகைக்கு எடுத்திருந்தார். இவரிடம் ராஜாபாதர் என்பவர் கூடுதல் வாடகை கேட்டு மிரட்டி, போலீசாரின் உதவியுடன் கடைக்கு சீல் வைத்ததாகவும், அதனை அகற்றக் கோரியும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த வாய்மொழி உத்தரவின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த திருவிக நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நேரு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவிட்டார். 

Night
Day