முதல் திருமணத்தை மறைத்து வேறு பெண்ணை திருமணம் செய்த காவலர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 கன்னியாகுமரியில் முதல் திருமணமானதை மறைத்து வேறு பெண்ணை திருமணம் செய்த காவலரை பெண்ணின் உறவினர்கள் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிராத்தூர் பகுதியை சேர்ந்த ஆஸ்மி என்ற பெண், காவல்துறையில் பணியாற்றும் ராஜேஷ் என்பவரை 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். திருமணமானதை மறைத்து காதலித்து வந்த ராஜேஷ், ஆஸ்மியிடம் தனக்கென யாரும் இல்லை எனக்கூறி பெண்ணின் உறவினர்கள் ஏற்பாடுடன் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இருவரும் ஆஸ்மியின் வீட்டிற்கு வந்தபோது ராஜேஷுடன் பணியாற்றிய சக காவலர் மூலம் அவருக்கு ஏற்கனவே திருமணமானது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஆஸ்மியின் உறவினர்கள் காவலர் ராஜேஷை சரமாரியாக தாக்கினர். தகவலறிந்து சென்ற ராஜேஷை மீட்டு, அவர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day