ராஜஸ்தானில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை - பெற்றோர்கள் அதிர்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராஜஸ்தானின் கோட்டா நகரில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறுதியாண்டு பி.டெக் மாணவரான நூர் முகமுது என்பவர்தான் அறையின் மின்விசிறியில் தூக்கிட்டு இறந்துள்ளார். ஆனால் அவர் தற்கொலை குறிப்பு எதுவும் எழுதி வைக்கவில்லை எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் கோட்டாவில் நடந்த மூன்றாவது தற்கொலை சம்பவம் இதுவாகும். 2 நாட்களுக்கு முன்புதான் ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த நிஹரிகா என்ற மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Night
Day