ராஜஸ்தான்: கோயில் உண்டியலை திருடும் முன்பு கடவுளை வழிபட்ட கொள்ளையன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராஜஸ்தான் மாநிலம் அல்வர் பகுதியில் கோயில் உண்டியலை திருடும் முன்பு, கொள்ளையன் சாமி கும்பிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்வது போல நுழையும் கொள்ளையன், முன்னும் பின்னும் பார்த்த பிறகு உண்டியலை திருடிச் செல்கிறான். இந்த காட்சிகள் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் 37 வயதான கோபேஷ் சர்மா என்பதும், அவர் தொடர்ந்து கோயில்களை மட்டுமே குறிவைத்து கைவரிசை காட்டி வருபவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கொள்ளையன் கோபேஷ் சர்மாவை காவல்துறையினர் கைது செய்தனர். 

Night
Day