ராணிப்பேட்டை: ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் கொள்ளை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆற்காடு அருகே ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை உதவி பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் தங்க நகைகள், 2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை அடித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தென் நந்தியாலம் எஸ்.பி. நகரை சேர்ந்தவர் சிட்டிபாபு.  இவர் போக்குவரத்து பணிமனையில் உதவி பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  இவர் தனது குடும்பத்தினருடன், வீட்டை பூட்டிக் கொண்டு சென்னையில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளார். பூட்டியிருந்த வீட்டை நோட்டமிட்ட மர்மநபர்கள் பூட்டை உடைத்து 200 சவரன் தங்க நகைகள், 2 லட்சம் ரொக்கம் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த சிட்டிபாபு, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Night
Day