ராமநாதபுரம் : திண்பண்டங்களை ஓசியில் தராததால் சரமாரி தாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் அருகே ஓசியில் திண்பண்டங்கள் கொடுக்காத பேக்கரி ஊழியர்களை ஆக்ரோஷமாகத் தாக்கிய நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. சாயல்குடி- கன்னியாகுமரி சாலையில் இயங்கி வரும் பேக்கரி ஒன்றில் நேற்று மாலை ஒருவர் திண்பண்டங்களை வாங்கிவிட்டு அதற்கு பணம் தர மறுத்துள்ளார். இதனால் பேக்கரி ஊழியர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த அந்த நபர், பேக்கரி ஊழியர் ஒருவரை கன்னத்தில் அறைந்தும், மற்றொருவரை காலால் உதைத்தும் கொடூரமாக தாக்கினார். இதுதொடர்பாக விசாரணை நடத்திவரும்போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.

Night
Day