ராமநாதபுரம்: கழிவு நீர் கால்வாய் திட்டப் பணிக்கு மின்கம்பத்தில் கொக்கி போட்டு மின் திருட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டத்தில் கழிவு நீர் கால்வாய் திட்டப் பணிக்கு மின்கம்பத்தில் கொக்கி போட்டு மின்சாரம் திருடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கடலாடி அருகே பெரியகுளம் கிராமத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி ஊராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த அரசு ஒப்பந்த திட்டப்பணி பயன்பாட்டிற்கு தெருவிளக்கு மின் கம்பத்தில் வயர் மூலமாக கொக்கியை போட்டு மின் திருட்டில் ஈடுபடும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day