ராமநாதபுரம்: குடிபோதையில் நடுச்சாலையில் படுத்து உறங்கிய இளைஞர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே குடிபோதையில் சாலையில் படுத்து உறங்கிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. பிடாரிச்சேரி என்ற இடத்தில் பிரபு பாண்டியன் என்பவர் போதை தலைக்கேறிய நிலையில் பரபரப்பான சாலையில் படுத்து உறங்கியுள்ளார். அப்பகுதி மக்கள் அவரை எழுப்ப முயன்றபோது, அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பார்த்தினூர் போலீசார் இளைஞரை எழுப்ப முயன்றபோது அவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சிறிதுநேர முயற்சிக்குப் பின்னர் பிரபு பாண்டியனை போலீசார் சாலையில் இருந்து எழுப்பி அப்புறப்படுத்தினர்.

Night
Day