ராமநாதபுரம்: வடமாநில இளைஞர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் வடமாநில இளைஞர் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 12 பேர் தேவிபட்டினத்தில் தங்கி ஹாலோ பிளாக் அமைக்கும் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜீவன்லால் குஸ்வாகா என்ற இளைஞர் தர்காதோப்பு பகுதியில் வெட்டுக் காயங்களோடு இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்து சென்ற போலீசார் இளைஞரின் உடலை மீட்டு, கொலையாளிகள் குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day