ராமநாதபுரம்: வீட்டுமனையில் பெயர் மாற்றம் செய்ய ரூ.10000 லஞ்சம் - 3 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரத்தில்  வீட்டுமனையில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். காரைக்குடியைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவரது தந்தை பெயரில் உள்ள வீட்டை, தயார் பெயருக்கு மாற்ற ராமநாதபுரத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய நிர்வாகப் பொறியாளர் ரவிச்சந்திரன் 10 ஆயிரம் ருபாய் லஞ்சம் கேட்டுள்ளார். மேலும் அதனை பதிவு எழுத்தர் பாண்டியராஜ் என்பவரிடம்  கொடுக்கும்படி கூறியிருக்கிறார். பாண்டியராஜ் ஒப்பந்த பணியாளர் பாலாமணியிடம் பணத்தை கொடுக்கும் படி கூறியுள்ளார். இதனையடுத்து,   பாலாமணி  பணத்தை வாங்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து நிர்வாக பொறியாளர் ரவிச்சந்திரன், எழுத்தர் பாண்டியராஜ், ஒப்பந்த ஊழியர் பாலாமணி ஆகியோரை கைது செய்தனர்.

Night
Day