ராமர்கிருஷ்ணன் கொலை வழக்கு : 5 பேர் முதுகுளத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூரில் படுகொலை செய்யப்பட்ட ராமர்கிருஷ்ணன் கொலை வழக்கு தொடர்பாக 5 பேர் முதுகுளத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் கடந்த 2012ம் ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவில் வெடிக்குண்டு வீசி தாக்கியதில் 7 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக, முக்கிய குற்றவாளியான ராமர்கிருஷ்ணன் உட்பட 11 பேர் மீது வழக்கு பதியப்பட்டு கரூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ராமர்கிருஷ்ணன் கரூர் நீதிமன்றத்தில், ஆஜராகிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, மர்மநபர்கள் சிலர் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிபடுகொலை செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக 5 பேர் முதுகுளத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

Night
Day