வாலாஜாபாத் : 21 வயது இளைஞரை கொலை செய்த 2 நண்பர்கள் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் 21 வயது இளைஞர் பாலாற்றில் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த ருத்திரகோட்டி என்பவருடைய மகன் தனுஷ், கடந்த சனிக்கிழமை இரவு நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற நிலையில், 5 நாட்களாக காணவில்லை. இதனால் பெற்றோர் மகனை தேடி வந்த நிலையில், கோயம்பாக்கம் பகுதியில் உள்ள பாலாற்றில் வலது கால் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. சடலத்தை கைப்பற்றி பார்த்தபோது, காணாமல் போன தனுஷ் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், தனுஷின் நண்பர்கள் விஷ்வா, சுந்தர் ஆகியோரை கைது செய்தனர். வட்டிக்கு வாங்கிய பணத்தை தருவதாக கூறி அழைத்து சென்று கொன்று புதைத்தது விசாரணையில் அம்பலமானது. 

varient
Night
Day