விருதுநகர்: கார் ஓட்டுநரை கொலை செய்துவிட்டு காரையும், பெண்ணையும் கடத்திச் சென்ற கும்பல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் ஓட்டுநரை கொலை செய்துவிட்டு காரையும், பெண்ணையும் கடத்திச் சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அத்திகுளம் கண்மாயில் காயங்களுடன், கேட்பாரற்று இறந்து கிடந்த முதியவரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவரது​பெயர் முருகன் என்பதும், 3 நபர்களுடன் மதுரையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்‍கு காரை வாடகைக்‍கு ஓட்டிச் சென்றதும் தெரியவந்தது. இதனிடையே, ருக்சனாபர்வீன் என்பவர், தனது மகளை முகமது அசாருதீனும், அவரது இரு நண்பர்களும் காரில் கடத்திச் சென்றதாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், முருகனை கொலை செய்துவிட்டு காருடன் சீராபானுவை கடத்திச் சென்றிருக்‍கலாம் என கோணத்தில் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

Night
Day