விழுப்புரம் : வைக்கோலுக்குள் மறைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் அருகே வைக்கோல் ஏற்றி சென்ற வாகனத்தில் மறைத்து கடத்தி செல்லப்பட்ட 5 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தென்னமாதேவி சுங்கச்சாவடி அருகே மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியில்இருந்து திருவண்ணாமலை நோக்கி வைக்கோல் ஏற்றி சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், வைக்கோலுக்கு அடியில் பெட்டி, பெட்டியாக புதுச்சேரி மதுபாட்டில் கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 ஆயிரம் மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், விஸ்வரெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரை கைது செய்தனர்.

Night
Day