விழுப்புரம்: அண்ணனை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்த தம்பி கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் அருகே குடும்ப தகராறில் அண்ணனை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர். காகுப்பம் பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவருக்கும் அவரது தம்பி பாரதி என்பவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், குப்புசாமி பாரதியின் மனைவி புஷ்பாவை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாரதி, குப்புசாமியை மண் வெட்டியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பாரதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Night
Day