விழுப்புரம்: அரசு மருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகனத்திருட்டில் ஈடுபட்ட 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடு போனது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேஷ் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், 25 இருச்சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Night
Day