விழுப்புரம்: ஊரை விட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட மீனவ குடும்பம் - தற்கொலைக்கு முயன்ற பெண்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே முன்விரோதம் காரணமாக ஊரை விட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட மீனவர் குடும்பத்தை சேர்ந்த பெண், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மரக்காணம் அருகே வசவன் குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது குடும்பத்துக்கும் அதே பகுதியை சேர்ந்த பக்தவச்சலம் என்பவரது குடும்பத்துக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்த பிரச்சனை காரணமாக ஆறுமுகத்தின் குடும்பத்தை மீனவ பஞ்சாயத்தார் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சல் அடைந்த ஆறுமுகத்தின் மனைவி பார்வதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மரக்காணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Night
Day