வீடு கட்டி தருவதாக தேமுதிக துணை பொதுச்செயலாளர் மனைவியிடம் மோசடி - 2 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேமுதிக துணை பொதுச்செயலாளல் சுதிஷின் மனைவியிடம் வீடு கட்டி தருவதாக பண மோசடி செய்த 2 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். லோகோ பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் சந்தோஷ் சர்மா என்பவர் மாதவரத்தில் 250 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணியை மேற்கொண்டு வந்துள்ளார். இங்கு தேமுதிகவின் மாநில துணை பொதுச்செயலாளர்  சுதிஷின் மனைவி பூர்ணஜோதி பல கோடி ரூபாய் கொடுத்து 78 வீடுகளுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளார். இந்நிலையில், ஒப்பந்தத்தின் படி வீடுகளை ஒதுக்காமல் 48 வீடுகளை வேறு ஒருவருக்கு விற்று 43 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பூர்ணஜோதி அளித்த புகாரின்பேரில், சந்தோஷ் சர்மா உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Night
Day