வீட்டில் பணி செய்த பெண்ணை அடித்து துன்புறுத்திய வழக்கு : திமுக எம்எல்ஏ மகன், மருமகளின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


பட்டியலின சிறுமியை துன்புறுத்திய வழக்கில் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் திமுக எம்எல்ஏ மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மெர்லின் ஆகிய இருவரும் கடந்த 25 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். ஆந்திராவில் தலைமறைவாக இருந்த இருவரும் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளனர். இந்த நிலையில், தங்களுக்கு ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 30ம் தேதி இருவர் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

Night
Day