வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கு : திமுக எம்எல்ஏ-வின் மகன், மருமகளின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ-வின் மகன் மற்றும் மருமகளின் நீதிமன்ற காவல் வரும் மார்ச் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக, பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மெர்லினா ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களது நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தநிலையில், நேற்று கானொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து அவர்களது நீதிமன்றம் காவலை , மார்ச் 7ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிபதி உத்தரவிட்டார். 

Night
Day