வேலூர்: அங்கன்வாடியில் விட்டுச் சென்ற குழந்தைக்‍கு முதுகில் காயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் விட்டுச் சென்ற ஒன்றரை வயது குழந்தையை அங்கன்வாடி ஊழியர் தாக்‍கியதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். புதுகுடியான் சத்திரம் பகுதியை சேர்ந்த பக்தவச்சலம் - சுஜாதா தம்பதியினருக்‍கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று பள்ளியில் படிக்‍கும் மூத்த மகளை அழைத்து வருவதற்காக சுஜாதா, தனது ஒன்றரை வயது மகளை வீட்டிற்கு அருகே உள்ள அங்கன்வாடியில் சிறிது நேரத்திற்கு விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை முதுகில் காயத்துடன் அழுது கொண்டிருந்தது. அங்கன்வாடி ஊழியர் தாக்‍கியதாலேயே தங்கள் குழந்தைக்‍கு காயம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள பெற்றோர், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்‍கப்போவதாகவும், அவர் மீது தக்‍க நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Night
Day