வேலூர்: திருமணமான மூன்றே மாதத்தில் இளம் தம்பதி தற்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே திருமணமான மூன்றே மாதத்தில் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கீழ்கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த பூவரசன் என்ற இளைஞருக்கு, 3 மாதத்திற்கு முன் கழனிபாக்கத்தை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் திருமணமானது. நேற்று முன் தினம் கணவன் - மனைவி இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஐஸ்வர்யா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து குடியாத்தம் மருத்துவமனையில் பூவரசனும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

varient
Night
Day