வேலூர்: பேக்கரியில் திண்பண்டம் வாங்கிய பெண்ணின் செல்போன், பர்ஸ் கொள்ளை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பேக்கரியில் திண்பண்டம் வாங்கிய பெண்ணின் செல்போன், மணிபர்சை அடையாளம் தெரியாத பெண் கொள்ளைடித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
பொன்னை பகுதியில் உள்ள பேக்கரியில் அரக்கோணத்தைச் சேர்ந்த விஜயா என்ற பெண்,  தனது பர்ஸ் மற்றும் செல்போனை கடையில் வைத்துவிட்டு திண்பண்டங்கள் வாங்கியுள்ளார். அப்போது அங்கு சென்ற அடையாளம் தெரியாத பெண் ஒருவர், பர்ஸ் மற்றும் செல்போனை கண்ணிமைக்கும் நேரத்தில் எடுத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து விஜயா அளித்த புகாரின்படி வழக்குப்பதிந்த பொன்னை போலீசார், பேக்கரில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் அப்பெண்ணை தேடி வருகின்றனர்.

Night
Day