ஹைதராபாத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளரை கடத்தி திருமணம் செய்ய முயன்ற இளம்பெண் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளரை கடத்தி திருமணம் செய்ய முயன்ற இளம்பெண்னை போலீசார் கைது செய்தனர். தெலுங்கு தொலைக்காட்சியில் பகுதி நேர தொகுப்பாளராக பணிப்புரிந்து வரும் பிரணவ் என்பவர், கடந்த 10ம் தேதி உப்பல் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்த இளம்பெண் ஒருவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரணாவை வழிமறித்து கடத்தியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிய பிரணவ் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பிரணவ் புகைப்படத்தை மேட்ரிமோனியில் பார்த்தவுடன், திருமணம் செய்து கொள்ள விரும்பியதால் அவரை கடத்தியதாக ஒப்புக்கொண்டார்.

Night
Day