10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - லாரி ஒட்டுநர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி ஓட்டுநரை மகளிர் போலீசார் கைது செய்தனர். திருவக்கரையில் சாலையோரம் உள்ள குடிநீர் குழாயில் குளித்து கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு, அவ்வழியே சென்ற லாரி ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுத்து சிறுமியை லாரியில் ஏற்றியுள்ளார். இதனை தடுக்க முயன்ற சிறுமியின் உறவுக்கார பெண்ணுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் சிறுமியை லாரியில் இருந்து இறக்கிவிட்டு சென்றுள்ளார், இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி இளைஞர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, நெமிலி அருகே லாரி ஓட்டுநரை கண்டுபிடித்து, கோட்டக்குப்பம் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து புதுச்சேரியை சேர்ந்த லாரி ஓட்டுநர் முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Night
Day