2 இரு சக்கர வாகனங்களில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் அருகே 2 பைக்குகள் மீது பின்னால் வந்த தனியார் பேருந்து அதிவேகமாக மோதியதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள பூமனூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் தனது மனைவி வேதவள்ளி மற்றும் குழந்தைகளோடு பைக்கில் சுக்கப்பட்டி பகுதியில் சென்றுகொண்டிருந்தார். இதேபோல  மற்றொரு பைக்கில் தம்பதி, தங்களது குழந்தையோடு சென்றுகொண்டிருந்தனர். இந்த இரு பைக்குகளுக்கு முன்னே லாரி ஒன்று செல்ல, பின் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று சென்றதாக கூறப்படுகிறது. வேகமாக சென்ற தனியார் பேருந்து இரண்டு பைக்குகள் பின்னார் மோதி விபத்தானது. இதில், பைக்குகள் பேருந்துக்கு அடியில் சிக்கியது.  இருப்பினும் பேருந்து நிற்காததால் தரதரவென பைக்குகளை இழுத்து சென்ற பேருந்து, முன்னால் சென்ற லாரியில் மோதி நின்றது. இதில் வேதவள்ளி, மற்றொரு பைக்கில் சென்ற தம்பதி மற்றும் அவர்களுடன் வந்த குழந்தை உள்ளிட்ட 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day