52 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் சத்யா கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எஸ்.ஐ. உள்பட 52க்கும் மேற்பட்ட ஆண்களை மயக்கி வலையில் வீழ்த்திய சத்யா என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். அன்பே ஆன்லைன் செயலி மூலமாக திருமணம் ஆகாத ஆண்களை குறி வைத்து திருமணம் செய்துவிட்டு பின்பு நகை பணத்துடன் எஸ்கேப் ஆவதையே தொழிலாக கொண்ட பெண் தான் சத்யா. இவருக்கு உதவியாக தமிழ்ச்செல்வி என்ற தரகர் உறுதுணையாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அரவிந்த் என்பவர் அளித்த  புகாரின் பேரில் சத்யாவை போலீசார் வலைவீசி தேடி வந்ததையடுத்து புதுச்சேரியில் பதுங்கிருந்த அவரை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். மேலும் சத்யாவுக்கு தரகராக செயல்பட்ட தமிழ்ச்செல்வியை தேடி வருகின்றனர். இந்நிலையில் தனது பேரன் ஏமாற்றப்பட்டதை அறிந்த பாதிக்கப்பட்ட அரவிந்தின் 85 வயதான தாத்தா விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Night
Day