65 வயது மூதாட்டி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு படுகொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே 65 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக 72 வயது முதியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திப்பணம்பட்டி கிராமத்தில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலின் பின்புறம் நேற்று முன்தினம் மூதாட்டி ஒருவர் அரை நிர்வாணத்துடன்  சடலமாக கிடந்தார். உடலை மீட்ட போலீசார் தொடர் விசாரணை நடத்தியதில் அதே கிராமத்தைச் சேர்ந்த ராமர் என்ற 72 வயது முதியவர்தான் மூதாட்டியை கொலை செய்தது தெரிய வந்தது. சம்பவத்தன்று மூதாட்டியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முயன்று அது கொலையில் முடிந்துள்ளதாக தெரிவித்த போலீசார் முதியவர் ராமரை கைது செய்தனர்.

Night
Day