876 சாராய வியாபாரிகள் கைது - கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரமா!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாடு வடக்கு மண்டல காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில்  876  சாராயம் வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாயாராயம் குடித்து இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தை அடுத்து, தமிழக வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் 861 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 876 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடமிருந்து 4 ஆயிரத்து 657 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது என்றும் கைது நடவடிக்கை தொடரும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day