"டீன்ஸ் -க்கு மரியாதை கிடைக்கலைன்னா சினிமாவை விட்டே போயிருப்பேன்" - பார்த்திபன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

"டீன்ஸ்" படத்திற்கு உரிய மரியாதை கிடைத்திருக்கவில்லை என்றால் சினிமாவை விட்டே போயிருப்பேன் என இயக்குனர் பார்த்திபன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு நெகிழ்ச்சியடைந்தார். இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் கடந்த 12 ஆம் தேதி வெளியான "டீன்ஸ்" திரைப்படம் நேர்மையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் தனது படத்திற்கு கிடைக்கும் பாராட்டுகளை கண்டு நெகிழ்ந்து போன இயக்குனர் பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "டீன்ஸ்"-க்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றால் நான் உயிராய் சுவாசித்த சினிமாவை விட்டு விலகி கண்காணாத இடத்துக்கு போயிருப்பேன் என்றும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட இப்படத்தை பள்ளிகளும் கல்லூரிகளும் கொண்டாட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

Night
Day