"வணங்கான் படத்தில் தன் கதாப்பாத்திரத்தை காதலித்து நடித்தேன்" - அருண் விஜய்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வணங்கான் திரைப்படத்தில் தன் கதாப்பாத்திரத்தை காதலித்து நடித்ததாக நடிகர் அருண் விஜய் தெரிவித்தார். நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனரஞ்சகமான திரைப்படங்களை மக்கள் விரும்புவதால், அதுபோன்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தான் நடிப்பதாகவும், அப்பா விஜயகுமார் முத்திரை பதித்த நாட்டாமை திரைப்படம் போல் தானும் நிச்சயம் அதற்கான படத்தை தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்றும் உறுதியளித்தார். மேலும் வணங்கான் திரைப்படப் பணிகள் விரைவில் முடிய உள்ளதாகவும், இயக்குநர் பாலா இயக்கத்தில் நடித்தது சுகமான அனுபவம் எனவும் விவரித்தார்.

Night
Day