இளையராஜா இசை நிகழ்ச்சியை காண குவிந்த மக்‍கள் - வாகன ஓட்டிகள் அவதி !

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் இளையராஜாவின் இசை கச்சேரி நடைபெறும் நிலையில் அண்ணாசாலையில் போக்‍குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை காண சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்தனர். இதனால் தவிர்க்‍க இயலாத நிலையில் நந்தனம் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் காவல் துறையினர் கடுமையாக முயற்சி செய்து போக்குவரத்து நெரிசலை குறைத்தனர்.  வாகனங்களை நிறுத்த வேண்டிய சூழலால் இந்நிகழ்ச்சிக்கு வராத மற்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ஏற்கனவே கடந்த ஆண்டு ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கச்சேரியில் காவல் துறையினர் சரியாக திட்டமிடாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Night
Day