கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகக்கூடாது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கல்லூரி மாணவர்கள் போதைப்பொருள்கள் உள்ளிட்டவற்றிற்கு அடிமையாகக்கூடாது என நடிகர் ஆரி அர்ஜுன் அறிவுறுத்தியுள்ளார். கோவை மாவட்டம், பொன்னேகவுண்டன் புதூர் பகுதியில் தனியார் கல்லூரியின் புதிய வளாக திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் ஆரி அர்ஜுன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய வளாகத்தினை திறந்து வைத்தார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் அவர் கண்டு ரசித்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஆரி அர்ஜுன், போதைப்பொருள்கள் உள்ளிட்டவற்றிற்கு அடிமையாகும் நண்பனை சக நண்பர்கள் தான் காக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Night
Day