கள்ளக்குறிச்சி: முடித்திருத்தும் தொழிலாளர்களை சந்தித்த நடிகர் ரோபோ சங்கர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் படப்பிடிப்பு தளத்தில் தன்னை காண வந்த முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கத்தினரை நடிகர் ரோபோ சங்கர், சலூனிற்கே நேரில் சென்று சந்தித்து பேசினார். நடிகர் ரோபோ சங்கர் படப்பிடிப்புக்காக சங்கராபுரத்திற்கு சென்றுள்ளார். அப்போது முடித்திருத்தும் தொழிலாளர்கள் சங்கத்தினர் அவரை சந்திக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனையறிந்த ரோபோ சங்கர் முடிதிருத்தும் சலூனிற்கு நேரில் சென்று அவர்களை பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், படித்த வேலையை விட பிடித்த வேலையை செய்வதுதான் நல்லது என்ற கருத்தை முன்னிருத்தி சிங்கப்பூர் சலூன் படம் எடுக்கப்பட்டதாக கூறினார். 

Night
Day