சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். நெஞ்சு வலி காரணமாக ஆஞ்சியோ சிகிச்சை பெற இன்று காலை மருத்துவமனையில் ரஹ்மான் அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டநிலையில், தற்போது அவர் வீடு திரும்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர், முழு ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏ.ஆர். ரஹ்மானுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள அவரது ரசிகர்கள் அவர் விரைவில் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

varient
Night
Day