சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு - கணவர் ஹேம்நாத் விடுதலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவருடைய கணவருக்கு எவ்வித தொடர்பும் இல்லை எனக்கூறி திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 

கடந்த 2020-ம் ஆண்டு சின்னத்திரை நடிகை சித்ரா தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதில் தன் மகளின் உயிரிழப்புக்கு அவருடைய கணவர் தான் காணரம் என சித்ராவின் பெற்றோர் அளித்த புகாரால், அவரது கணவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இவ்வழக்கில் அவருடைய கணவருக்கு எவ்வித தொடர்பும் இல்லை எனக்கூறி அவரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

Night
Day