செக் மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் சரண்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செக் மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். ராமநாதபுரம் தேவிபட்டினத்தை சேர்ந்த முனியசாமி என்பவர் இறால் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். அவரது தொழிலை மேம்படுத்த 15 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாகக்கூறி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் 14 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளார். இதனால், அவர் மீது ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முனியசாமி வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கின் விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்த பவா் ஸ்டார் சீனிவாசனுக்கு நீதிபதி நிலவேஸ்வரன் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த நிலையில் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் சரண் அடைந்தார்.

Night
Day