தங்கலான் படத்துக்கு முன்கூட்டியே ரூ.1 கோடி டெபாசிட் செய்ய உத்தரவு - சென்னை உயர் நீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் விக்ரமின் தங்கலான் படத்தை வெளியிடும் முன் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பெற்ற கடனை திருப்பி செலுத்தாததால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை திவாலானவராக அறிவிக்க கோரி உயர் நீதிமன்ற சொத்தாட்சியர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தை வெளியிடும் முன் ஞானவேல் ராஜா ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், கங்குவா படத்தை வெளியிடும் முன் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்யவும் ஆணையிட்டுள்ளது.

Night
Day