தனிப்பட்ட புகைப்படத்தை காண்பித்து மிரட்டல் - பார்வதி நாயர் புகார்

எழுத்தின் அளவு: அ+ அ-

தனது தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு மிரட்டுவதாக, முன்னாள் உதவியாளர் மீது நடிகை பார்வதி நாயர் குற்றம்சாட்டியுள்ளார்.

நடிகை பார்வதி நாயர் தனது உதவியாளரை கட்டி வைத்து தாக்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பார்வதி நாயர் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பார்வதி நாயர் தனது வழக்கறிஞர் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்நீதிமன்ற உத்தரவை மீறி முன்னாள் உதவியாளர் சுபாஷ் அவதூறு பரப்பி வருவதாகவும், தனது தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, பணம் கேட்டு மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 

Night
Day