தயாரிப்பாளர் டில்லி பாபு உடல்நலக்குறைவால் காலமானார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பேச்சுலர், ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரபல தாயாரிப்பாளர் டில்லி பாபு உடல்நலக்குறைவால் காலமானார். 

2015ம் ஆண்டு வெளியான உறுமீன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமான டில்லி பாபு, மரகத நாணயம், பேச்சுலர், ஓ மை கடவுளே, ராட்சசன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். தமிழ் சினிமாவில் இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களுள் முக்கியமான நபராக திகழும் டில்லி பாபு கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி டில்லி பாபு இன்று அதிகாலை காலமானார். இவரின் இந்த திடீர் மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இவரின் மறைவிற்கு பல்வேறு திரையுலக நட்சத்திரங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்


Night
Day