தற்கொலை செய்து கொண்ட அமெரிக்க விமானப்படை வீரருக்கு ஜி.வி பிரகாஷ் இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரேல் - காசா போரின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட அமெரிக்க விமானப்படை வீரருக்கு, இசையமைப்பாளர் ஜீ.வி பிரகாஷ் இரங்கல் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த போரில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இஸ்ரேல்-காசா போரால் அதிருப்தியில் இருந்த அமெரிக்க விமானப்படை வீரர் ஒருவர் நேற்று முன் தினம் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தனது X வளைத்தளத்தில் இரங்கல் தெரிவித்த இசையமைப்பாளர் ஜீ.வி பிராகாஷ், மனிதம் காக்க தன்னுயிர் ஈந்த மாமனிதனுக்கு என் கண்ணீர் அஞ்சலி என்றும், தற்கொலைகள் எந்த சூழலிலும் ஏற்புடையதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். 

Night
Day