நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் "மேகம் கருக்காதா" பாடலுக்காக நடன இயக்குனர் ஜானிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலியல் குற்றச்சாட்டு புகாரில் நடன இயக்குநர் ஜானி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, தேசிய விருது பெறுவதற்காக ஜாமீன் கோரிய ஜானிக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், வரும் 8ம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில், ஜானி மாஸ்டருக்கு வழங்கப்பட இருந்த தேசிய விருது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் விருது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day