நடிகை கங்கனா ரனாவத்துக்கு சண்டிகர் நீதிமன்றம் நோட்டீஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எமர்ஜென்சி திரைப்படம் தொடர்பாக நடிகை கங்கனா ரனாவத்துக்கு சண்டிகர் நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. நடிகை கங்கனா தயாரித்து, நடித்து இயக்கியுள்ள எமர்ஜென்சி திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், அதனால் ஏற்பட்ட இழப்பீட்டை சமாளிக்க தனது குடியிருப்பை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் எமர்ஜென்சி திரைப்படத்தில் சீக்கிய சமூகத்தினரை இழிவுபடுத்தும் விதமாக சில காட்சிகள் உள்ளதாகவும், அவர் மீது வழக்குப்பதிவு செய்த நடவடிக்கை உத்தரவிடக்கோரியும் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் சண்டீகர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், மனு தொடர்பாக உரிய பதிலளிக்குமாறு நடிகை கங்கனாவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Night
Day