படே மியான் சோட் மியான் படத்தின் நிகழ்ச்சியில் சண்டை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் நடைபெற்ற படே மியான் சோட் மியான் படத்தின் நிகழ்ச்சியில் ரசிகர்கள் கற்களை வீசித் தாக்கிக்கொண்டதால், போலீசார் தடியடி நடித்தனர். நடிகர் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் நடித்த படை மியான் சோட் மியான் படத்தின் நிகழ்ச்சி ஒன்று லக்னோவில் நடைபெற்றது. இதில் ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். அப்போது நடிகர்கள் இருவரும் ரசிகர்களுக்கு பரிசுகளை மேடையில் இருந்து தூக்கி வீசினர். அதில் கீழே இருந்த ரசிகர்கள் பொருட்களை வாங்க மேடையை நோக்கி முண்டியடித்தனர். அப்போது ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரையொருவர் கற்கள் மற்றும் காலணிகளை தூக்கி வீசித் தாக்கி கொண்டனர். இதனை கண்ட போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

Night
Day