பழம்பெரும் குணச்சித்திர நடிகை சகுந்தலா உடல் நலக்‍குறைவால் காலமானார்.

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பழம்பெரும் குணச்சித்திரை நடிகை சகுந்தலா உடல் நலக்‍குறைவால் காலமானார். அவருக்கு வயது 84.
பெங்களூருவில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்த அவருக்கு, நேற்று நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1970 -ஆம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான ’சிஐடி சங்கர்’ படத்தில் அறிமுகமானதால், அதன் பிறகு ‘சிஐடி’ சகுந்தலா என்று அழைக்கப்பட்டார். சேலம் மாவட்டம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த சகுந்தலா, சென்னையில் லலிதா, பத்மினி, ராகினி நடத்தி வந்த நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனமாடி வந்தார். பின்னர் திரையுலகில் நுழைந்து சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். தொடர்ந்து தொலைக்‍காட்சி தொடர்களில் நடித்து வந்தார். சகுந்தலாவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Night
Day