பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹாவுக்கு எதிரான வழக்கு : விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அனுமதியின்றி விதிமுறைகளை மீறி கட்டடங்கள் கட்டியதாக, பிரபல நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தபோது, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபிசிம்கா ஆகியோர் கொடைக்கானலில் கட்டியுள்ள கட்டுமானம் உரிய அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டதாகவும், இருவரும் மேற்கொண்ட கட்டுமான பணிகளை நிறுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாகவும் அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், அனுமதியற்ற கட்டுமானம் மீது உள்ளூர் திட்டக்குழுமம் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Night
Day