புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மகிழ்வித்த நடிகர் மைம் கோபி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் மைம் கோபி, புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மகிழ்விப்பதற்காக அவர்களை விமானத்தில் அழைத்துச் சென்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் மைம் கோபி, முதல் பரிசு பெற்று, அதில் கிடைத்த தொகையை புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு செலவிட விரும்புவதாக தெரிவித்திருந்தார். அந்த வகையில் அண்ணா நகரில் இயங்கும் தேன் மொழி நினைவு அறக்கட்டளையுடன் இணைந்த அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புற்று நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, தனது சொந்த செலவில், சென்னையிலிருந்து விமானம் மூலம் பெங்களூரு அழைத்துச் சென்று குழந்தைகளை மனதளவில் உற்சாகப்படுத்தினார்.

Night
Day