பூனம் பாண்டேவுக்‍‍கு எதிராக ரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்‍கு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தான் மரணமடைந்துவிட்டதாக நாடகமாடிய நடிகை பூனம் பாண்டே மற்றும் அவரது முன்னாள் கணவர் மீது 100 கோடி ரூபாய் கேட்டு அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிக்பாஸ் பிரபலமும், பிரபல மாடல் நடிகையுமான பூனம் பாண்டே, கடந்த 2-ம் தேதி கர்ப்பப்பை புற்றுநோயால் இறந்துவிட்டதாக செய்தி வெளியானது. ஆனால் அடுத்த நாளே, `தான் இறக்கவில்லை என்றும், கர்ப்பப்பை புற்று நோய் குறித்து பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இவ்வாறு நடந்து கொண்டதாக பூனம் பாண்டே வீடியோ வெளியிட்டார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் போலியாக சமூகவலைதளங்களில் தன்னுடைய இறப்பு குறித்து பதிவு செய்ததற்கு கண்டனம் தெரிவித்து, கான்பூர் போலீசிலில் பூனம் பாண்டே மற்றும் அவரது முன்னாள் கணவருக்‍கு எதிராக  ஃபைசன் அன்சாரி என்பவர் 100 கோடி ரூபாய் கேட்டு அவதூறு வழக்கு பதிந்துள்ளார்.

Night
Day