பொது இடத்தில் சால்வையை வீசி எறிந்தது தவறுதான் - சிவக்குமார் வருத்தம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்த நுால் வெளியீட்டு விழாவில் ரசிகர் அணிவித்த பொன்னாடையை நடிகர் சிவக்குமார் தூக்கி வீசியது சர்ச்சையான நிலையில், அது தொடர்பாக நடிகர் சிவக்குமார் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சிவக்குமார், சால்வை போட வந்தவர் வேறு யாரும் இல்லை, தனது 50 ஆண்டுகால நண்பர்தான் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், சால்வை போட வந்தவரிடம் பொது இடத்தில் சால்வையை வாங்கி தூக்கி எறிந்தது தனது தவறுதான் என ஒப்புக்கொண்ட சிவக்குமார், அதற்காக வெளிப்படையாகவே வருத்தம் தெரிவித்தார்.

Night
Day